Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

28.7.08

நதியாட்டம்--புன்னகை சேது

அதிரடியாக ஆடி ஆடி
அடிவாங்கியதுதான் மீதமானது.
சுயத்தின் வர்ணம் வடியாமலிருக்க...
தலைவனெனப்படுபவன் விட்டுக்கொடுப்பதால்
அடிவாங்க வேண்டியிருக்கிறது ஒவ்வொருமுறையும்.
இன்றைய ஆட்டத்தை
மிக நிதானமாக ஆடத்தொடங்கியிருக்கிறோம்.
எங்கள் களிப்புக்களைத் தேக்கியிருக்கும்
அணைகளைத் தகர்க்கும் சிந்தனையோடும்
உரிமை உரிமை எனக்கதறும்
மக்களின் முன்னிலையிலும் ஆடப்படுவதால்
நிச்சயமாக்கப்பட்டிருக்கிறது வெற்றி.
நடுவர் யாருமில்லை என்பது
அதற்குக் கூடுதல் பலம்.